பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

விஜய் டிவியில் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் போன்று ஜீ தமிழ் சேனலும் சர்வைவர் என்றொரு புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்குகிறார்.
இதில் பங்குபெறும் போட்டியாளர்கள் ஒரு தனித்தனித்தீவில் விடப்படுவர். அதையடுத்து அவர்களுக்கு வழங்கப்படும் சவால்களில் வெற்றி பெற்று பரிசுகளை வென்று போட்டியில் இருந்து வெளியேறாமல் தங்களை அவர்கள் காத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் இந்தநிகழ்ச்சியின் கான்செப்ட்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் 8 போட்டியாளர்களின் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், நடிகர்கள் விக்ராந்த், நந்தா, உமாபதி ராமைய்யா, நடிகைகள் ஸ்ருஷ்டி டாங்கே, விஜயலட்சுமி, காயத்ரி ரெட்டி, வில்லன் நடிகர் பெசன்ட் ரவி, தொகுப்பாளினி பார்வதி ஆகியோர் பங்கேற்கின்றனர். இதற்கான புரொமோ வீடியோ வெளியாகி உள்ளது.
செப்., 12 முதல் தினமும் இரவு 9.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.