இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17 ம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டே நாளில் அவர் மரணம் அடைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தடுப்பூசி போட்டதால்தான் விவேக் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார் என்று தகவல்கள் பரவியது. ஆனால் இதனை அரசு மருத்துவர்களும், அதிகாரிகளும் மறுத்தனர்.
கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியதால்தான் நடிகர் விவேக் மரணமடைந்துள்ளார். அவரது இறப்பில் மர்மம் இருக்கிறது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையத்தில் விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் புகார் மனு அளித்தார். இந்த புகார் மனுவை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க முடிவு செய்துள்ளது. இதனை ஆணையம் முறைப்படி அறிவித்துள்ளது.