இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தெலுங்கில் 'சாகுந்தலம்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து இரு மொழிகளிலும் சமந்தாவைத் தேடி பல வாய்ப்புகள் வருகிறதாம். மேலும், வெப் சீரிஸ்களில் நடிக்கவும் கேட்டு வருகிறார்களாம். ஆனால், சில மாதங்கள் சினிமாவில் நடிக்காமல் ஓய்வெடுக்கலாம் என சமந்தா முடிவு செய்துள்ளாராம்.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில், “இப்போது சமந்தா 2.0 வெர்ஷனைப் பார்த்து வருகிறீர்கள். விரைவில் சமந்தா 3.0 வெர்ஷனைப் பார்ப்பீர்கள். நடிப்பதை விட மாட்டேன்,” என்று தெரிவித்துள்ளார்.
நாக சைதன்யாவுடன் சமந்தாவுக்குத் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. குழந்தை பெற்றுக் கொள்ள அவர் முடிவு செய்துவிட்டார் என்று வந்த தகவல்களுக்குத்தான் அப்படி பதிலளித்துள்ளாராம்.
சமீபத்தில் கோவாவில் ஒரு பார்ம் ஹவுஸை சமந்தா, நாகசைதன்யா வாங்கியுள்ளார்கள். அங்கு புதிதாக கட்டுமான வேலைகள் ஆரம்பமாக உள்ளதாம். ஒரு வேளை அதைக் கவனிப்பதற்காகவும் சமந்தா சிறிது ஓய்வெடுக்கலாம் என்றும் டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.