கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

சமீபநாட்களாகவே தமிழ் திரையுலகில் ஒரு பக்கம் ஜெயம் ரவி (கெனிஷா) மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் (ஜாய் கிரிசில்டா) ஆகியோர் தங்களது மனைவியை இன்னும் முறைப்படி விவாகரத்து செய்யாமல் பிரிந்து வாழ்வதும், அதற்குள்ளாகவே தங்களுக்கு ஏற்ற இன்னொரு துணையை தேர்ந்தெடுத்து அவர்களுடன் வெளிப்படையாகவே நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் ரசிகர்களிடம் பரபரப்பு ஏற்படுத்தி பேசு பொருளாகியுள்ளன. அதேசமயம் நடிகை சமந்தா இதற்கு முன்னதாகவே இதுபோன்று பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ் நிடிமொருவுடன் நட்புறவில் இருந்து வந்ததும் இதேபோல பேசப்பட்டது.
சமந்தா முறைப்படி திருமண விவாகரத்து பெற்றுவிட்டாலும் கூட, இயக்குனர் ராஜு இன்னும் தனது மனைவியிடமிருந்து இருந்து விவாகரத்து பெறவில்லை. அதேசமயம் மீடியாக்களின் வெளிச்சத்தை தவிர்த்து அவ்வப்போது ஒரு சில நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்ட சமந்தா மற்றும் இயக்குனர் ராஜு, தற்போது அது குறித்த எந்த தயக்கமும் இன்றி வெளிப்படையாகவே ரசிகர்கள் மற்றும் புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுத்தபடி பொதுவெளியில் வருவதும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் என இருக்கின்றனர்.
சமீபத்தில் அப்படி ஒரு இடத்தில் இருந்து வெளியே வந்து, தனது காரில் ஏறி அமர அவரது பின்னாலேயே வந்த இயக்குனர் ராஜு தானும் அந்த காரில் ஏறி அமர்ந்துகொள்ள கார் கிளம்புகிறது, இது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் தற்போது வைரல் ஆகி வருகிறது.