சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
சண்டக்கோழி 2 படத்தை அடுத்து தெலுங்கு நடிகர் ராம்பொத்னேனியை வைத்து தமிழ், தெலுங்கில் ஒரு படத்தை இயக்கி வருகிறார் லிங்குசாமி. இந்த படத்தில் கிருத்தி ஷெட்டி நாயகியாக நடிக்க, நதியா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்காக லிங்குசாமி வில்லன் நடிகர் தேடி வந்தபோது மாதவனிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அப்படியொரு விசயமே நடக்கவில்லை என்று மாதவனே மறுத்தார். பின்னர் தனது புதிய படத்தில் ஆதி வில்லனாக நடிப்பதாக செய்தி வெளியிட்டார் லிங்குசாமி.
இந்நிலையில் தற்போது லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கான காட்பாதர் படத்தை சிரஞ்சீவியை வைத்து இயக்கி வரும் மோகன் ராஜாவும் அந்த படத்தில் முதலில் மலையாள நடிகர் பிஜூமேனனை வில்லனாக நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார். ஆனால் இப்போது ஒரு மெகா நடிகர் நடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று மாதவனை காட்பாதரில் வில்லனாக நடிக்க வைக்க மோகன் ராஜா அவரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது சீக்கிரமே தெரிந்து விடும்.