'எக்ஸ்க்ளுசிவ் ஒப்பந்தம்' : 'வார் 2' செய்வது சரியா ? | கூலி படத்தில் ரஜினிக்கு ஜோடி கிடையாதா? | இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? |
கொரோனா இரண்டாவது அலை தளர்வுகளுக்குப் பிறகு கடந்த வாரம் ஆகஸ்ட் 23ம் தேதி முதல் தியேட்டர்களை 50 சதவீத இருக்கைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றுடன் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
இருப்பினும் தமிழகம் முழுவதும் இன்னும் தியேட்டர்கள் முழுமையாகத் திறக்கப்படவில்லை. புதிய படங்கள் எதுவும் வெளியாகாததே அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. சில ஆங்கில, ஹிந்தி, தெலுங்குப் படங்களை வைத்துக் கொண்டு சில தியேட்டர்கள் செயல்பட ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் இந்த வாரம் முதல் சில புதிய படங்கள் தியேட்டர்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வார வெள்ளிக்கிழமை செப்டம்பர் 3ம் தேதியன்று 'தேவதாஸ் பிரதர்ஸ்' படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில புதிய படங்கள் வெளியாகும் என்றும் தெரிகிறது.
அதற்கடுத்த வாரம் செப்டம்பர் 9ம் தேதி விஜய் சேதுபதி நடித்துள்ள 'லாபம்', செப்டம்பர் 10ம் தேதி கங்கனா ரணவத், அரவிந்த்சாமி நடித்துள்ள 'தலைவி' படம் ஆகியவை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையும் வருவதால் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. எனவே, அந்த வாரத்தில் மேலும் சில படங்களை வெளியிடும் வேலைகளும் நடந்து வருகிறதாம்.
அடுத்த சில வாரங்களில் தியேட்டர்களுக்கு மக்களை வரவழைக்க வேண்டும் என தியேட்டர்காரர்கள் தயாரிப்பாளர்களை அணுகிக் கொண்டிருக்கிறார்களாம்.