தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஒரு படம் வெற்றியடைந்ததுமே அந்தப் படம் சம்பந்தப்பட்ட முக்கியமானவர்கள் சம்பளத்தை உயர்த்திவிடுவது வழக்கம். பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி நாயகனாக நடித்து வெளிவந்த 'தலைவன் தலைவி' படம் 75 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் ஒரு படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதற்காக இருவருமே அவர்களது சம்பளத்தை உயர்த்திக் கேட்டுள்ளார்களாம். ஆனால், அது குறித்து தயாரிப்பு நிறுவனம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் இப்போது கதாநாயகர்களுக்கான சம்பளம் மிக அதிகமாகிவிட்டது. ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரது சம்பளம் 200 கோடியைக் கடந்துள்ளதாகச் சொல்கிறார்கள். விஜய் இனி நடிக்கப் போவதில்லை. தேர்தலுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கடுத்துள்ள நடிகர்களில் 50 கோடி சம்பளம் கேட்கும் நடிகர்கள் தான் உள்ளனர். அவர்களில் சிலர் விரைவில் 100 கோடி சம்பளம் கேட்கத் தயாராக உள்ளதாகவும் சொல்கிறார்கள்.