படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

தெலுங்கில் 'சாகுந்தலம்' படத்தில் நடித்து முடித்த சமந்தா, தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில வாரங்களாக சமந்தாவுக்கும், அவரது காதல் கணவர் நாகசைதன்யாவிற்கும் இடையே திருமண வாழ்க்கையில் பிரச்சினை என டோலிவுட்டிலிருந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இருப்பினும் இரு தினங்களுக்கு முன்பு தனது மாமனார் நடிகர் நாகார்ஜுனாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தார். ஆனால், மருமகள் சமந்தாவின் வாழ்த்திற்கு மாமனார் நாகார்ஜுனா இதுவரை நன்றி தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிட வேண்டியது.
இதனிடையே, தனது நெருங்கிய தோழி ஷில்பா ரெட்டி என்பவருடன் தெலங்கானா மாநில கிராமப்புறங்களில் சுற்றுலா சென்றுள்ளார். தோழியின் மகனுடன் ஒரு குளம் அருகே எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமந்தா பகிர்ந்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக அவரது கணவர் நாகசைதன்யாவுடன் இருக்கும் எந்த புகைப்படத்தையும் அவர் சமூக வலைத்தளங்களில் பகிரவில்லை.
இருப்பினும் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கும், டிரோல்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக 'டிரோல்கள்' பற்றி ஆடம் கிரான்ட் என்ற அமெரிக்க சைக்காலஜிஸ்ட் பகிர்ந்த ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார்.