ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

சமீபத்தில் மணிரத்னம், ஷங்கர், வெற்றிமாறன், லிங்குசாமி, மிஷ்கின், சசி, வசந்த பாலன், கவுதம் மேனன், பாலாஜி சக்திவேல், ஏ.ஆர்.முருகதாஸ், லோகேஷ் கனகராஜ் ஆகிய 11 இயக்குனர்கள் இணைந்து பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கினர். இவர்கள் புதிய படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும், இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும், இதில் நாயகனாக நடிக்க சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்ட படமாக இது தயாராவதாகவும் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜின் கனவு படமான இரும்புக்கை மாயாவி தான் இந்த படம்.
தற்போது ஞானவேல் இயக்கும் ஜெய்பீம், பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் சூர்யா. இவற்றுள் ஜெய்பீம் படம் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த படத்துக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ள சூர்யா, அப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.