'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு |
விஜய் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில், கங்கனா ரணவத், அரவிந்த்சாமி, சமுத்திரக்கனி, நாசர், பூர்ணா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தலைவி'.
மறைந்த முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 10ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, ஆகிய மொழிகளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். ஆனால், தற்போது படத்திற்குப் புதிதாக சில பிரச்னைகள் வந்துள்ளது.
இப்படத்தின் தமிழ், ஹிந்தி ஓடிடி வெளியீட்டு உரிமையை அமேசான், நெட்பிளிக்ஸ் ஆகிய தளங்களுக்கு விற்றுள்ளார்கள். தியேட்டர்களில் வெளியான இரண்டு வாரங்களில் படத்தை ஓடிடியில் வெளியிடலாம் என அவர்களிடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாம். இரண்டு வாரங்களில் ஓடிடியில் வெளியாகும் படத்தை நாங்கள் ஏன் தியேட்டர்களில் வெளியிட வேண்டும் என தியேட்டர்காரர்கள் கேள்வி கேட்கிறார்களாம்.
குறைந்தபட்சம் ஒரு மாத காலம் கழித்துத்தான் ஓடிடிக்களில் படங்களை வெளியிட வேண்டும் என்பதுதான் தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. எனவே, இது தொடர்பாக இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட உள்ளது.
இதனிடையே, மஹாராஷ்டிரா மாநிலத்தைத் தவிர மற்ற மாநிலங்களிலதான் 'தலைவி' படத்தின் ஹிந்தி பதிப்பு வெளியாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்குப் பிறகுதான் அம்மாநிலத்தில் தியேட்டர்களைத் திறக்கும் முடிவில் இருக்கிறதாம் அம்மாநில அரசு. அதற்குள் 'தலைவி' படம் வெளிவந்து இரண்டு வாரங்கள் ஆகிவிடும் என்கிறார்கள்.