இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் ஆகிய ஹிந்தி, தெலுங்கு, கன்னட சினிமா உலகில் போதைப் பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது பற்றிய பல துறைகளின் விசாரணை தீவிரமடைந்து வருகிறது.
தற்போது அமலாக்கப் பிரிவு இது குறித்த விசாரணையை தெலுங்குத் திரையுலக பிரபலங்களிடம் நடத்தி வருகிறது. தெலுங்கு இயக்குனரான பூரி ஜெகன்னாத் நேற்று விசாரணைக் குழுவினர் முன் ஆஜரானார். இந்த வழக்கில் 12 தெலுங்கு சினிமா பிரபலங்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அவர்களிடம் 2015ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. நேற்று அவற்றை பூரி ஜெகன்னாத் விசாரணைக் குழுவிடம் அளித்துள்ளார். நேற்று அவரிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இன்று பூரி ஜெகன்னாத் உடன் சினிமா தயாரிப்பாளராக இருக்கும் நடிகை சார்மி அமலாக்கப் பிரிவு முன் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். நான்கு வருடங்களுக்கு முன்பு இதே போன்றதொரு விசாரணைக்கு ஆஜராகும் போது காவலர் ஒருவர் தன்னைத் தொட்டார் என்ற குற்றச்சாட்டை எழுப்பினார் சார்மி. அதனால், இந்த முறை முழுவதும் பெண் காவலர்களை பாதுகாப்பிற்கு நிறுத்த உள்ளார்களாம்.
இந்த விசாரணை விவகாரங்களால் டோலிவுட்டில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.