தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்ட்மென்ட் நிறுவனத்தின் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார். ஏற்கனவே தனது தம்பி கார்த்தியை வைத்து 'கடைக்குட்டி சிங்கம்' என்ற வெற்றி படத்தை தயாரித்தார். இப்போது மீண்டும் அவரை வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறார். இதை கார்த்தியை வைத்து கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்குகிறார். மேலும் கொம்பன் படத்தில் நடித்த ராஜ்கிரணும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சூரி, அதிதி(அறிமுகம்) மற்றும் பலர் நடிக்கின்றார்கள்.
இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகவுள்ளது. படத்திற்கு “விருமன்” என்று பெயரிட்டுள்ளனர். இப்படம் மூலம், இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைகிறார். 'மாநகரம்' மற்றும் பல ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.K.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை அமைக்கின்றார். இப்படத்தின் பூஜை திங்கள்கிழமை நடைபெறுகிறது. செப்டம்பர் 18 ஆம் தேதி தேனியில் படப்பிடிப்பு துவங்குகிறது.