இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
கன்னடத்தில் தயாராகி வரும் படம் விக்ராந்த் ரோணா. கிச்சா சுதீப், நிரூப் பந்தாரி, நீட்டா அசோக், ஜாக்குலின் பெர்ணாண்டஸ், உள்பட பலர் நடிக்கிறார்கள். அனூப் பண்டாரி இயக்குகிறார், ஜாக் மஞ்சுநாத் மற்றும் ஷாலினி மஞ்சுநாத் தயாரிக்கிறார்கள்.
சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் பேண்டஸி த்ரில்லர் வகை படமாகும். பல வருடங்களுக்கு பிறகு கன்னடத்தில் உருவாகும் 3டி தொழில்நுட்ப படம். கன்னடம் தவிர்த்து 14 மொழிகளில் வெளியாகிறது. படத்தின் 3டி பணிகளுக்கென்றே பல கோடி செலவு செய்கிறார்கள்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் அனூப் பண்டாரி கூறியதாவது: விக்ராந்த் ரோணா ஒரு மர்மம் நிறைந்த கதாபாத்திரம். இந்த திரைப்படத்தை உருவாக்கும் போது, இது மிகப்பெரியபாத்திரம் என்பதை புரிந்து கொண்டேன். சுதீப் சார் இதில் கதாநாயகனாக வந்த பிறகு, அப்பாத்திரத்தின் பலம் இன்னும் அதிகமாகிவிட்டது. இப்படம் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும். என்றார்.