தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

இயக்குனர் ஷங்கர், ராம் சரண் இணையும் முதல் படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடந்தது. இந்த பூஜையில் சிறப்பு விருந்தினர்களாக சிரஞ்சீவி, இயக்குனர் ராஜமவுலி, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
ஆர்சி 15 என தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாக்க உள்ளதாக சொல்லி உள்ளார்கள். 200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் ராம் சரண் நடித்து முடித்துள்ளார். இப்படம் வெளிவந்த பிறகு ராம் சரணின் மார்க்கெட் நிலவரம் இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையும் கருத்தில் கொண்டு தான் ஷங்கர், ராம் சரண் படத்தை பிரம்மாண்டமாக எடுக்க முடிவெடுத்துள்ளார்களாம்.
ஏஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரை மட்டுமே தனது படங்களுக்கு இசையமைப்பாளராகப் பயன்படுத்தி வந்த ஷங்கர், 'பாய்ஸ்' படத்தில் அவர் நடிகராக அறிமுகப்படுத்திய தமனை இந்தப் படத்தில் இசையமைப்பாளராக நியமித்துள்ளார். தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார் தமன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷங்கர் அடுத்து இயக்க உள்ள 'அந்நியன்' ஹிந்தி ரீமேக்கின் கதாநாயகன் ரன்வீர் சிங் இந்தப் படபூஜையில் கலந்து கொண்டதில் ஆச்சரியமில்லை. சிரஞ்சீவி, அவரது மகன் ராம்சரண் படம் என்பதாலும், தனது அபிமான இயக்குனர் ஷங்கர் என ராஜமவுலி ஏற்கெனவே சொன்னதாலும் அன்புக்காகக் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.