ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

கடந்த 2019ம் ஆண்டு ரஜினி நடித்த பேட்ட படமும், அஜித் நடித்த விஸ்வாசம் படமும் தியேட்டரில் மோதிக் கொண்டன. இதில் விஸ்வாசமே வெற்றி பெற்றது. இந்த நிலையில் வருகிற தீபாவளிக்கு ரஜினி நடித்த அண்ணாத்த படமும், அஜித் நடித்த வலிமை படமும் மோதிக் கொள்ள இருக்கிறது.
விஸ்வாசம் படத்தை இயக்கிய சிவா தான் அண்ணாத்த படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் ஹீமா குரைஷி, கார்த்திகேய கும்மகொண்டா, யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. அதற்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது. இந்த படம் ஆயுத பூஜை தினத்தன்று (அக்டோபர் 14) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 50 சதவீத இருக்கைக்கு மட்டும் அனுமதி இருப்பதால் அஜித் படங்களுக்கே உரிய ஓப்பனிங் கலெக்ஷன் பாதிக்கும் என்பதால் படத்தை ஆயுத பூஜைக்கு வெளியிட தயாரிப்பாளர் தயங்குவதாக தெரிகிறது.
கொரோனா 3வது அலை தொடங்காவிட்டால் தீபாவளியை ஒட்டி 100 சதவீத இருக்கைக்கு அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது. அதனால் வலிமை படத்தையும் தீபாவளி அன்று வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இன்றைக்குள்ள சூழ்நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள் நம்பி இருப்பது பெரிய நடிகர்களின் படங்களைத்தான். ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளிவருவது தியேட்டர் வசூலை பாதிக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள். இதனால் இரு படங்களையும் வெவ்வேறு நாட்களில் வெளியிட அவர்கள் தயாரிப்பாளர்களுடன் பேசி வருவதாக கூறப்படுகிறது.