இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா நடிப்பில் உருவாகியுள்ள தலைவி படம் நேற்றைய தினம் வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்த படம் வெளியாகி இருப்பதை அடுத்து ஹாலிவுட் படங்களான சாங் சி மற்றும் எப்-9 ஆகிய படங்களும் இந்தியா முழுக்க திரையிடப்பட்டு ஓடிக்கொண்டிருக்கின்றன. அதோடு இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்து வருகின்றன. இந்த செய்தி கங்கனாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் வழியான பெல்பாட்டம் திரைப்படம் 4 நாட்களில் 2.75 கோடிகளை வசூலித்தபோது, ஹாலிவுட் படமான சாங் சி முதல் மூன்று தினங்களில் 12.63 கோடிகளை வசூலித்தது. இப்படி அக்ஷய்குமார் போன்ற நடிகர்களின் படங்களுக்கே இந்த நிலை என்றால் தனது தலைவி படத்தின் வசூல் இந்த ஹாலிவுட் படங்களை பாதிக்கப்படுமோ என்ற அதிர்ச்சி காரணமாகவே ஹாலிவுட் படங்களால் இந்திய படங்களின் வசூல் பாதிக்கிறது. அதனால் ஹாலிவுட் படங்களின் இந்திய ஆதிக்கத்தை தடுக்க வேண்டும் என்று ஒரு அதிரடி கருத்து வெளியிட்டுள்ளார் கங்கனா.