திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
சூர்யா- ஜோதிகா ஆகிய இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது. காக்க காக்க, பேரழகன், மாயாவி, சில்லுன்னு ஒரு காதல் உள்பட 7 படங்களில் நடித்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே காதல் மலர்ந்ததை அடுத்து 2006 செப்டம்பர் 11-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று சூர்யா-ஜோதிகாவின் 15வது திருமண நாள் ஆகும்.
இந்த நிலையில் சூர்யாவின் புகைப்படத்துடன் ஆண் சிங்கம் ஒன்று பெண் சிங்கத்தை கட்டியணைத்தபடி இருப்பது போன்று தான் வரைந்த ஒரு புகைப்படத்தை சூர்யாவுக்கு திருமண நாள் பரிசாக வழங்கியுள்ள ஜோதிகா, இதை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அத்துடன் சூர்யா குறித்த சில நெகிழ்ச்சி பதிவும் போட்டுள்ளார்.
அதில், சரியான நபரை சந்திப்பது அவரவர் விதி. அவருக்கு மனைவியாக வேண்டும் என்பது நான் எடுத்த முடிவு. ஆனால் ஒவ்வொரு நாளும் அவரிடம் காதலில் விழுவது என்னை மீறி நடக்கும் செயல். எப்போதும் அவர் அவராகவே இருப்பதினால்தான் இது சாத்தியமாகிறது. எங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த தந்தையாக, எனக்கு சிறந்த கணவராக, சில நேரங்களில் எனது அப்பா அம்மாவாகவும் இருக்கும் எனது வாழ்நாள் நண்பனுக்கு எனது சிங்கத்துக்கு திருமண நாளில் ஒரு குட்டிப்பரிசு, என்று பதிவிட்டுள்ளார் ஜோதிகா.