ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
நடிகை நிவேதா தாமஸ் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் கடைசியாக பவன் கல்யாண் உடன் வக்கீல் சாப் படத்தில் நடித்தார். தமிழில் தர்பார் படத்தில் ரஜினியின் மகளாக நடித்திருந்தார்.
நிவேதா தாமஸ் சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் மாட்டுப் பண்ணையில் ஒரு பசுவின் மடியில் பால் கறந்து அதில் காபி செய்து குடித்துள்ளார். மகிழ்ச்சி என்ற தலைப்புடன் அவர் அந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த விடியோவை அடுத்து விலங்குகள் நல ஆர்வலர்கள் பலர் அவரைத் தாக்கிப் பேசி வருகின்றனர்.
ஒரு பெண்ணாக இருந்து கொண்டு மற்றொரு பெண்ணை சுரண்டுவது கொடூரமானது, அது மற்றொரு இனத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும். மற்றொரு உயிரினத்தின் உடலில் இருந்து லாபம் ஈட்டுவதற்கு நமக்கு உரிமை இல்லை, குறிப்பாக பாலுறவு சுரண்டலுக்குப் பிறகு, மனிதர்களுக்கு பால் வழங்குவதற்காக மட்டுமே அது செறிவூட்டப்படுகிறது. என்று தெரிவித்துள்ளனர். இதே போல் பல விலங்கு நல ஆர்வலர்களும் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்த விமர்சனத்திற்கு நிவேதா இன்னும் பதிலளிக்கவில்லை