தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சீனு ராமசாமி இயக்கத்தில் என்ஆர் ரகுநந்தன் இசையமைப்பில், ஜிவி பிரகாஷ்குமார், காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் 'இடி முழக்கம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி ஆரம்பமானது. தேனி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பெரும்பாலான படப்பிடிப்பு நடைபெற்றது. படத்திற்கு 'இடி முழக்கம்' என்ற பெயரை ஆகஸ்ட் 11ம் தேதியன்று அறிவித்தார்கள்.
குறுகிய காலத்தில் படப்பிடிப்பை நடத்தி நேற்றுடன் முடித்துள்ளார்கள். அது பற்றி படத்தின் நாயகன் ஜிவி பிரகாஷ்குமார், “இடிமுழக்கம்' படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது.திருவிழா முடிந்து பள்ளிக்கு செல்லப் போகும் மாணவனை போல சென்னை வருகிறேன். இந்த அழகான நாட்களை நினைவுகளாக எனக்கு தந்த சீனு ராமசாமி சாருக்கு நன்றி,” என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அதற்கு சீனு ராமசாமி, “ஆணவம் இல்லாத அறிவு
“தாய்மொழிப் பற்று
தன்னை ஒப்புவித்து
ஒத்துழைத்த கலை எளிமை
இசையோடு கூடிய
தமிழறிவு
என் கலை மீதான
அன்பு
இவையெல்லாம் உங்கள்
பக்கம் எனை ஈர்த்தது
"வெற்றித்தமிழன்"
என்றே உங்களை
அழைக்க விழைகிறேன்
துணை வரட்டும்
என் தாய் மீனாட்சி
வாழ்த்துகள் தம்பி” என பதிலளித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஜான் பென்னி குவிக்கிற்கு மலர் மாலை மரியாதை செய்து இடிமுழக்கம் குழுவினர் தங்களது படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளனர்.