ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

இலங்கையில் நடந்த இறுதிப்போரை மையமாக வைத்து பல படங்கள் தயாராகி வருகின்றன. சமீபத்தில் கூட பேமிலிமேன்-2 என்ற வெப் தொடர் இலங்கை பிரச்சினையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. இதில் சமந்தா இலங்கை தமிழ்ப் பெண்ணாக நடித்திருந்தார். இந்த தொடரை ஒளிபரப்பு செய்ய எதிர்ப்புகள் எழுந்தது, என்றாலும் அது வெளியானது.
இந்த நிலையில் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து விட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவரான நடிகை லாஸ்லியாவிடத்தில் இலங்கை தமிழ்ப் பெண்ணான நீங்கள் இலங்கை பிரச்சினையை மையமாக் கொண்ட கதைகளில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறீர்களா? என்று ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், ‛‛அந்த மாதிரி கதைகளில் நடிக்கவே மட்டேன் என்று கூறியுள்ளார். மேலும், நான் இலங்கையில் வாழ்ந்தவள் என்ற முறையில் அங்கு நடந்த கொடுமையை நேரில் பார்த்திருக்கிறேன். அந்த சம்பவங்களை உயிருள்ள வரை என்னால் மறக்க முடியாது. அதனால் அதுபோன்ற ஒரு கதைகளில் நடிப்பதைகூட எனது மனம் ஏற்றுக்கொள்ளாது என்று தெரிவித்துள்ளார் லாஸ்லியா.
ஹர்பஜன்சிங் நடித்த பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நாயகியாக நடித்த லாஸ்லியா, அடுத்தபடியாக ஆரியுடன் ஒரு புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.