ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு ஒரு மாதத்திற்கு முன் ஆகஸ்ட் 23ம் தேதி தமிழ்நாட்டில் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதன்பிறகு வந்த முதல் வெள்ளிக்கிழமையான ஆகஸ்ட் 28ம் தேதி, அதற்கடுத்து செப்டம்பர் 3ம் தேதியும் எந்த ஒரு புதிய படமும் வெளியாகவில்லை. செப்டம்பர் 9ம் தேதி 'லாபம்', 10ம் தேதி 'தலைவி', 17ம் தேதி 'கோடியில் ஒருவன், பிரண்ட்ஷிப்' ஆகிய படங்கள் தியேட்டர்களில் வெளிவந்தன. கடந்த ஒரு மாதத்தில் அதிக பட்சமாக கடந்த வாரம் மட்டும் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியானது.
ஆனால், நாளை மறுதினம் செப்டம்பர் 24ம் தேதி ''பிளான் பண்ணி பண்ணனும், சூ மந்திரக்காளி, பேய் மாமா, வீராபுரம், சின்னஞ்சிறு கிளியே, பிறர் தர வாரா, சிண்ட்ரல்லா” ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. இவற்றில் ஏதாவது ஒரு மாற்றம் கடைசி நேரத்தில் ஏற்படலாம்.
இருப்பினும், இரண்டாவது அலைக்குப் பிறகு ஒரே வாரத்தில் இத்தனை படங்கள் இந்த வாரம் வெளியாக உள்ளது திரையுலகத்தினருக்கு மகிழ்ச்சி தான். ஆனால், மக்கள் தான் தியேட்டர்கள் பக்கம் இன்னும் அதிகமாக வரத் தயங்குகிறார்கள்.
அக்டோபர், நவம்பர் மாதங்களில் சில பெரிய படங்கள் வர உள்ளதால் அப்போது தியேட்டர்கள் கிடைக்க பிரச்சினையாக இருக்கும். அதனால், இந்த வாரம் இத்தனை படங்கள் வெளிவருதாக கோலிவுட்டில் சொல்கிறார்கள்.