பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் |
பிரபல தெலுங்கு தயாரிப்பளார் சி.கல்யாண். ஜோதி லட்சுமி, லோபர், ஜெய்சிம்மா, இண்டலிஜெண்ட, ரூலர் உள்பட பல படங்களை தயாரித்துள்ளார். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராக இருந்தார்.
ஆந்திர மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஆன்லைன் டிக்கெட் விற்பனை, அதற்குரிய வரி உள்ளிட்ட விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் ஆந்திர அமைச்சர் பேர்னி நானி, தயாரிப்பாளர்கள் தில் ராஜு, டிவிவி தானய்யா உள்ளிட்ட பல முக்கியத் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் தயாரிப்பாளர் சி.கல்யாணும் கலந்துகொண்டார்.
இந்த கூட்டத்தில் கல்யாண் பேசியது இப்போது சர்ச்சையாகி உள்ளது. அவர் பேசியிருப்பதாவது: போஸ்டர்களில் ரூ.200 கோடி, ரூ.500 கோடி வசூல் என்று போடுவதெல்லாம் மக்களை ஏமாற்றவே. ஹிட் ஆகியிருக்கும் ஒரு திரைப்படத்தை அவர்கள் தவறவிடுகிறார்கள் என்கிற எண்ணத்தை உருவாக்கவே இதைச் செய்கிறோம். இதனால் பலன் கிடைத்திருக்கிறது. இங்கு தவறுகளே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், எல்லாம் தவறாக நடக்கவில்லை. சில படங்கள் உண்மையிலேயே நல்ல வசூலைப் பெறுகின்றன. என்று பேசியுள்ளார்.
இந்த பேச்சை செல்போனில் பதிவு செய்து யாரோ வெளியிட்டுள்ளனர். அது இப்போது சர்ச்சை ஆகியுள்ளது.