இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
அருண் கிருஷ்ணா மற்றும் தக்ஷனா ஜோடியாக நடிக்க, 18 வயது இளைஞர் ஈஸ்வர் இயக்கிய, ‛காற்றினிலே' 50 நிமிட படத்தை, இயக்குனர் பாக்யராஜ் பாராட்டியுள்ளார். படம் குறித்து அவர் கூறுகையில், ‛‛இந்த இளம் குழு படத்தை அற்புதமாக உருவாக்கியுள்ளனர். இயக்குனர் ஈஸ்வர் கோபால கிருஷ்ணனின் தன்னம்பிக்கையை பாராட்ட வேண்டும்,'' என்றார்.
இயக்குனர் ஈஸ்வர் கூறுகையில், ‛‛ஒரே இரவில் இருவருக்கு இடையே நடக்கும் காதல் கதைஇது. கற்றது தமிழ் படத்தில் வரும் பாடல் ஒன்றில், ‛கதை பேசிக்கொண்டு வா காற்றோடு போவாம்...' என்ற வரியே எனக்கு இப்படத்தை உருவாக்க உத்வேகம் தந்தது. இதில் நெருக்கமான, மது உள்ளிட்ட போதைப்பொருள் காட்சிகள் எதுவும் இல்லை,'' என்றார்.