ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' |
சிரிப்பு நடிகர் மட்டுமின்றி சிந்திக்க வைக்கக்கூடிய நடிகராகவும் இருந்தவர் விவேக். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் மீது அதிக பற்று கொண்டவரான விவேக், அவரது மறைவிற்கு பிறகு கிரீன் கலாம் என்ற திடத்தை தொடங்கி ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவதை இலக்காகக் கொண்டு பயணித்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் அவர் மரணமடைந்தார்.
மேலும், விவேக் காமெடியனாக நடித்து கடைசியாக தாராள பிரபு என்ற படம் வெளியானது. இந்த நிலையில் கடந்த ஆண்டிற்கான சைமா விருது விழாவில் சிறந்த காமெடியனுக்கான விருது விவேக்கிற்கு வழங்கப்பட்டது. அந்த விருதினை அவர் சார்பில் நடிகர் யோகிபாபு பெற்றுக் கொண்டார். அதோடு விவேக்கின் வீட்டிற்கு சென்று அந்த விருதினை அவர் வழங்கியிருக்கிறார்.
இந்ததகவலை விவேக்கின் மகள் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அதில், தனது தந்தைக்கான விருதினை பெற்றதற்காக தாராளபிரபு படக்குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ள அவர், அந்த விருதினை தனது வீடு தேடி வந்து கொடுத்த யோகிபாபுவிற்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.