இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சினிமாவின் காதல் ஜோடியான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் இன்று(செப்., 27) காலை திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர். பெருமாளை தரிசித்து விட்டு கோயிலில் இருந்து வெளியில் வந்தது முதல் அவர்களது காரில் ஏறும் வரை வீடியோகிராபர்களும், போட்டோகிராபர்களும் விடாமல் 'க்ளிக்'கிக் கொண்டே இருந்தனர். இருவரும் பொறுமையாக அனைவருக்கும் 'போஸ்' கொடுத்தனர்.
நடுவில் கொஞ்சம் வயதான ரசிகர் ஒருவர் நயன்தாராவுடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கேட்க, அந்த ரசிகருடன் செல்பி எடுத்துக் கொண்டார் நயன்தாரா. நயனும், சிவனும் கைகோர்த்தபடியே தான் நடந்து வந்தனர். அவர்களுக்கு பாதுகாவலர்களாக சிலரும் கூடவே நடந்து வந்தனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தில் உள்ளது. சமீபத்தில் விக்னேஷ் சிவன் அவரது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார். எல்லாவற்றிற்கும் சேர்த்து வேண்டுதலுக்காக அவர் திருப்பதி சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது.
சமந்தா சமீபத்தில் திருப்பதி சென்ற போது அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஒரு நிருபர் கேள்வி கேட்டு, அவரை சமந்தா திட்டிய வீடியோக்கள் வைரலாகின. இந்நிலையில் இன்று நயன்தாராவிடம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி யாரும் எந்த கேள்வியும், கேட்கவில்லை.