பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
கேரள அரசு ஆண்டுதோறும் சிறந்த மலையாள திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. விருதுக்குரியவர்களை தேர்வு செய்யும் கமிட்டிக்கு பெரும்பாலும் பிற மொழி சினிமா கலைஞர்களை நியமித்து வருகிறது. பாரதிராஜா, கே.பாக்யராஜ், பாலச்சந்தர், மகேந்திரன் உள்ளிட்ட பலர் தலைவராக இருந்துள்ளனர்.
இந்த நிலையில் 2020ம் ஆண்டுக்கான சிறந்த கலைஞர்களை தேர்வு செய்யும் கமிட்டிக்கு நடிகை சுஹாசினியை கேரள அரசு நியமித்துள்ளது. கமிட்டி தலைவராக ஒரு நடிகை நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்த கமிட்டியில் கன்னட இயக்குனர் சேஷாத்திரி, மலையாள இயக்குனர் பத்ரன், ஒளிப்பதிவாளர் முரளிதரன், இசை அமைப்பாளர் மோகன் சித்ரா, ஒளிப்பதிவாளர் ஹரிகுமார், கதாசிரியர் சசிதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நடிகை சுஹாசினி சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக பணியாற்றி வருகிறார். பல்வேறு சர்வதேச திரைப்பட விருது விழாவில் நடுவராக பணியாற்றி உள்ளார்.