இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
தங்கள் கதைக்கான ஹீரோக்கள் கிடைக்காதபோதோ அல்லது ஹீரோக்களுக்கு கிடைக்கும் வசதிகள், மரியாதையை பார்க்கும்போதோ தாங்களும் ஹீரோவாகி விடலாம் என்கிற எண்ணம் சில இயக்குனர்களுக்கு ஏற்படும். இயக்குனர் சேரன், பிரவீன் காந்தி முதல் ஹரஹர மகாதேவகி இயக்குனர் சந்தோஷ் வரை இப்படி ஏதோ ஒரு காரணத்திற்காக அரிதாரம் பூசியவர்கள் தான். அந்த பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்துள்ளார் கோமாளி இயக்குனர்.. அதாவது கோமாளி படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்..
ஜெயம் ரவி, காஜல் அகர்வால் ஆகியோரின் நடிப்பில் 2 வருடங்களுக்கு முன்பு அம்னீசியா என்கிற நோயை பின்னணியாகக் கொண்டு கோமாளி என்கிற படத்தை கலகலப்பாக உருவாக்கியிருந்தார் பிரதீப் ரங்கநாதன். அதைத்தொடர்ந்து அவருக்கு அடுத்ததாக பட வாய்ப்புகள் வரும் எதிர்பார்த்த நிலையில் இரண்டு வருடங்களாகியும் அவரது புதிய பட அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில்தான் அவர் இயக்கவுள்ள புதிய படத்தில் அவரே கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்றும் அதனால்தான் அவரது இரண்டாவது படம் இவ்வளவு தாமதம் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.