துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. குடும்ப பின்னணியில் பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது. இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ‛அண்ணாத்த அண்ணாத்த என்ற பாடலை மாலை 6மணிக்கு வெளியிட்டனர். ரஜினிக்காக பல ஓபனிங் பாடலை பாடி உள்ளார் எஸ்.பி.பி. அனேகமாக இந்த பாடலும் ஓபனிங் பாடலாக தான் இருக்கும் என தெரிகிறது. நம்பிக்கைக்கான வரிகளுடன் அண்ணாத்த ரஜினியின் புகழ்பாடும் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது.
இந்த பாடல் வெளியானதும் நடிகர் ரஜினி டுவிட்டரில், ‛‛45 ஆண்டுகள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி, அண்ணாத்தே படத்தில் எனக்காக பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.