இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
தற்போதைய முன்னணி காமெடியனான யோகிபாபு தீவிரமான ஆன்மீகவாதி என்பதை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புகளுக்கு சென்றாலும் அங்குள்ள முருகன் கோயில்களை தேடிச் சென்று சாமிதரிசனம் செய்கிறார்.
அதோடு, தனது சொந்த ஊரில் வராஹி அம்மனுக்கு ஒரு கோயில் கட்டியுள்ள யோகிபாபு, குடும்பத்துடன் பல கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். இந்தநிலையில், கலகலப்பு-2 படத்தை அடுத்து மீண்டும் சுந்தர்.சி இயக்கியுள்ள அரண்மனை-3 படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள யோகிபாபு, மகாளய அமாவாசையை முன்னிட்டு சுந்தர்.சிக்கு ஒரு விநாயகர் சிலையை பரிசாக வழங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.