படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

‛கட்டில்' படப்புகழ் கணேஷ்பாபு, தயாரித்து, இயக்கி, எழுதியுள்ள படம் ‛கருவறை'. ரித்விகா, மிதுன், அஞ்சனா தமிழ்செல்வி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹங்கேரியில் நடக்க உள்ள பேரடைஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்திற்கான விருதுக்கு தேர்வாகியுள்ளது.
கணேஷ்பாபு பேட்டி: தாயின் கருவறையில் உள்ள பிறக்கப் போகும் தம்பிக்காக சிறுமி கதை சொல்லிக் கொண்டிருக்ககிறாள். தாயோ குடும்ப சூழல் காரணமாக கருவை கழிவறையில் கழுவி தள்ளுகிறாள். இப்படி ஒரு காட்சி கருவறை படத்திற்காக படமாக்கப்பட்டுள்ளது. இதில் கதை சொல்லும் சிறுமியாக நடித்த அஞ்சனா தமிழ்செல்வியும் கருவிலேயே களையப்பட இருந்தவர்.
கருக்கலைப்பை மையமாக கொண்ட இப்படத்தின் கதை என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. இன்று நம் நாட்டில், குழந்தையின்றி அவதிப்படும் லட்சக்கணக்கானோர் உள்ளனர் அதேவேளையில், குழந்தையை அநாயசமாக கலைக்கவும் செய்கின்றனர். கருக்கலைப்பு என்பது 10ல் 7 பேர் வாழ்க்கையில் நடந்துள்ள விஷயமாக உள்ளது. ஆனால் இதை யாரும் வெளிப்படையாக பேசுவதில்லை. கருக்கலைப்பால் உடல் மற்றும் மனரீதியாகவும் பலர் பாதிக்கின்றனர். இன்று வீட்டுக்கு வீடு, கருக்கலைப்பு பிரச்னை உள்ளது. ஆனால் அது வெளிப்படையாக பேசுவதில்லை' என்றார்.