இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கமர்ஷியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கர். பொன்ராம் இயக்கி இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற கேள்வி சிவகார்த்திகேயனிடம் கேட்கப்பட்டது. அதற்கு சிவகார்த்திகேயன், ‛‛வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் வேண்டாம் என்பது என் கருத்து. அது ஜாலியாக எடுக்கப்பட்ட படம். அதேசமயம் ‛ரெமோ' படத்தில் வரும் நர்ஸ் கதாபாத்திரத்தை வைத்து வேண்டுமானால் ஒரு படம் இயக்கலாம்'' என கூறியிருந்தார்.
இந்நிலையில் இதன் இரண்டாம் பாகத்தை எடுத்தே தீருவோம் என இயக்குனர் பொன்ராம் கங்கணம் கட்டி நிற்கிறார். டுவிட்டரில் அவர் கூறுகையில், ‛சிவகார்த்திகேயன் வளர்ந்து விட்டார். வளர்ந்து வரும் இளம் நாயகனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் 2ம் பாகத்தை எடுத்தே தீருவோம். போட்றா வெடிய' எனக்கூறியுள்ளார்.