ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
காதலித்து, திருமணம் செய்த தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை பிரிந்துவிட்டார் நடிகை சமந்தா. இவர்கள் பிரிவுக்கு சமந்தா குழந்தை பெற விரும்பாததே முக்கிய காரணம் என செய்தி பரவியது. அதை சமந்தா மறுத்தும் இருந்தார். மேலும் எந்த ஒரு தம்பதியர் விவகாரத்து என்று அறிவித்தால் உடனே தவறுகள் அனைத்தும் பெண்கள் செய்ததாகவே இந்த சமூகம் பார்க்கிறது. ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என சமந்தா கூறியிருந்தார்.
இந்நிலையில் இவர் நடித்து முடித்துள்ள சாகுந்தலம் படத்தை தயாரித்துள்ள நீலிமா குணா ஒரு பேட்டியில், ‛‛என் தந்தை குணசேகர் இந்த கதையை சமந்தாவிடம் கூறியபோது அவருக்கு கதை பிடித்து இருந்தது. ஆகஸ்ட்டிற்குள் படத்தை முடிக்கும்படியும், அதன்பின் அவர் குழந்தை பெற விரும்புவதாகவும் சொன்னார் என தெரிவித்துள்ளார்.