படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி மக்களின் மனதை கவர்ந்த தொடர் யாரடி நீ மோகினி. பேய் நாடகமா குடும்ப நாடகமா என மக்களையே கன்ப்யூஸ் செய்தாலும் சுவாரசியமாக நகர்ந்த திரைக்கதை அத்தொடருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத்தந்தது. அதே போல ரசிகர்களின் பேச்சைக்கேட்டு க்ளைமாக்ஸை ஷூட் செய்யும் அளவுக்கு ரசிகர்களிடம் மிகவும் நெருக்கமான இடத்தை இந்த தொடர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரின் க்ளைமாக்ஸ் காட்சியில் வில்லியாக நடித்த சைத்ராவுக்கும் பேயாக நடித்த யமுனாவுக்கும் மிகப் பெரிய சண்டை நடப்பது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதற்காக ரோப், க்ரெயின், ஜாக்கி போன்ற சினிமாக்களில் பயன்படுத்தப்படும் கருவிகளை வைத்து பெரிய சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கம் செய்திருந்தனர். இதில் நடிகைகள் இருவருக்கும் டூப் பயன்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் அந்த சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட விதத்தை அதில் நடித்த நடிகை யமுனா இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் சைத்ராவும், யமுனாவும் ரோப்பின் உதவியுடன் எப்படி நடித்தனர் என்பதை பார்க்க முடிகிறது. என்னதான் ரோப் என்றாலும் நடிகைகள் இருவரும் ஒரு சீரியலுக்காக இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்திருப்பதை பார்த்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.