தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தொகுப்பாளினியாக களமிறங்கிய ஐஸ்வர்யா, சூப்பர் குடும்பம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதன் பிறகு சிவாகார்த்திகேயனுடன் ஜோடி நம்பர் நிகழ்ச்சியில் நடனமாடி அசத்தி பிரபலமானார். தொடந்து வீஜே, சீரியல் நடிகை என சிறகடிந்த பறந்த ஐஸ்வர்யாவை தேவதையாக நினைத்து சுற்றி வந்த ரசிகர் கூட்டம் ஏராளம்.
இந்நிலையில் அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அதன் பின் திரையில் தோன்றாவிட்டாலும் சோஷியல் மீடியாக்களில் தன் வாழ்வில் நடக்கும் மகிழ்ச்சியான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சமீபத்தில் தெரிவித்திருந்த அவர், தற்போது மற்ற சீரியல் நடிகைகள் போலவே போட்டோஷூட் ஒன்றை நடத்தி அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர், தனது கர்ப்பமான வயிற்றில் பூமி போன்ற பெயிண்டிங் வரைந்து, மேலே ஒருபுறம் சந்திரனையும் மறுபுறம் சூரியனையும் வைத்து, உடல் முழுவதும் செடி கொடிகளை சுற்றிக் கொண்டு 'இயற்கை தாய்' என்பதை குறிப்பாக காட்டும் வகையில் போட்டோ எடுத்துள்ளார்.
வைரலாகும் இந்த புகைப்படத்தை பார்க்கும் நெட்டீசன்கள் ஐஸ்வர்யாவின் கலை ஆர்வத்தை கலாய்ப்பதா அல்லது குழந்தைக்காக வாழ்த்துகள் சொல்வதா என்ற தெரியாமல் குழப்பத்துடன் சுற்றி வருகின்றனர்.