இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பெங்களூரை பூர்வீகமாக கொண்ட ஆஷிகா படுகோன் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் சின்னத்திரை நடிகையாக பிரபலமாகியுள்ளார். நிஹாரிகா, த்ரிவேணி சங்கமம், கதலோ ராஜகுமாரி ஆகிய ஹிட் சீரியலில் நடித்து வந்த ஆஷிகா தமிழில் தமிழ்ச்செல்வி தொடரின் மூலம் அறிமுகமானார். தமிழ் ரசிகர்களிடையே இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்றாலும் 247-வது எபிசோடிலேயே தொடர் முடிவுற்றது.
இதற்கிடையில் ஆஷிகா படுகோனும் தவிர்க்க முடியாத காரணங்களால் சீரியலின் பாதியிலேயே வெளியேறினார். எனினும் தமிழில் தனக்கான ரசிகர் பட்டாளத்தை இந்த தொடரில் நடித்ததன் மூலம் உருவாக்கி கொண்டார். இந்நிலையில் ஆஷிகாவுக்கு சமீபத்தில் சேட்டன் ஷெட்டி குமார் என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அவரது திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகும் வரும் நிலையில் தமிழ் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை ஆஷிகா படுகோன் - சேட்டன் ஷெட்டி குமார் தம்பதியினருக்கு தெரிவித்து வருகின்றனர்.