பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

இயற்கை விவசாயம், விவசாயிகளின் பிரச்சினை, ஆடு மாடு வளர்ப்பு பற்றிய கதை களத்தை கொண்ட திரைப்படங்கள் அதிக அளவில் வரத் தொடங்கி உள்ளது. அந்த மாதிரியான கதைகளத்தை கொண்ட சின்னத்திரை தொடர்களும் உருவாகிறது.
அந்த வரிசையில் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் முத்தழகு. அமீர் இயக்கத்தில் கார்த்தி, பிரியாமணி நடித்த பருத்தி வீரன் படத்தில் பிரியாமணியின் கேரக்டர் பெயர்தான் முத்தழகு. கிராமத்து தெனாவெட்டான பெண். அந்த பெயரையே சீரியலுக்கு டைட்டிலாக வைத்திருக்கிறார்கள்.
முத்தழகு விவசாயத்தையும், கிராமத்து வாழ்க்கையையும் தேர்வு செய்து வாழ்கிறார்கள். அவளது வாழ்க்கையின் ஊடாக விவசாயத்தின் பெருமை, மனிதர்களுக்கும் ஆடு, மாடுகளுக்கும் இருக்கிற பிணைப்பு குறித்து மண்வாசனையுடன் தயாராகி வருகிறது. இதில் நடிக்கும் அனைவரும் புதுமுகங்கள் என்கிறார்கள். படப்பிடிப்பு நடந்து வருகிறது. சீரியல் பற்றிய முதல் கட்ட அறிவிப்பை விஜய் டி.வி வெளியிட்டுள்ளது.