வாழைப்பழக் கடை நடத்தியவரின் மகன் இன்று பிரபாஸ் பட இயக்குனர் | பவன் கல்யாண் நடிக்கும் படத்தை இயக்க தனுஷ் விருப்பம் | பிளாஷ்பேக்: சிவாஜியின் வசனம், டி எம் எஸ் பேசிப் பாடி, சிறப்பித்த திரைப்படப் பாடல் | குபேரா : தமிழ் டிரைலரை ஓவர்டேக் செய்யும் தெலுங்கு டிரைலர் | லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி தொடரில் ஹீரோ சூர்யா கதாபாத்திரத்தில் புது நடிகர் நடிக்க இருப்பதை தொலைக்காட்சி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஓளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியல் 200 எபிசோடுகளை கடந்து ஓடி வருகிறது. இதில் ஹீரோவாக தர்ஷன் கே ராஜூ நடித்து வந்தார். இந்நிலையில் அவர் திடீரென சீரியலை விட்டு வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இனி அவருக்கு பதிலாக மிதுன ராசி சீரியலில் நடித்த சுவாமிநாதன் அனந்தராமன் என்ற நடிகர் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரண்மனை கிளி தொடரின் மூலம் பிரபலமான தர்ஷன் இந்த தொடரிலும் நன்றாக நடித்து ரசிகர்களின் மதிப்பை பெற்று வந்தார். இந்நிலையில் எந்தவொரு காரணமும் தெளிவாக தெரியாத நிலையில் அவர் சீரியலை விட்டு விலகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.