தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சின்னத்திரை நடிகையான வீணா வெங்கடேஷ், அவர் நடித்து வந்த இரண்டு சீரியல்களிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதையடுத்து கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரபல நடிகை வீணா வெங்கடேஷ் சித்தி 2 சீரியலிலும், விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சமீபத்தில் விஜய் டிவி சீரியலில் அவர் நடித்த கதாபாத்திரத்தில் வேறொருவர் மாற்றப்பட்டார். இந்நிலையில் சித்தி 2 சீரியலிலிருந்தும் வீணா வெங்கடேஷை கழட்டி விட்டுள்ளனர்.
இது குறித்து பேசியுள்ள வீணா வெங்கடேஷ், 'சித்தி 2-வில் சுப்புலெட்சுமியாகவும், காற்றுக்கென்ன வேலி சீரியலில் மீனாட்சியாகவும் இரண்டு அருமையான கதாபாத்திரங்களில் நடித்து வந்தேன். இந்த இரண்டு சீரியல்களும் எனக்கு குடும்பம் போல இருந்தது. ஆனால், திடீரென எனக்கு கொரோனா வந்து விட்டது. சீரியல் குழுவினர் எனக்காக கொஞ்சகாலம் காத்திருந்தார்கள். ஆனால், எனக்கு டெஸ்ட் முடிய இன்னும் இரண்டு நாட்கள் தேவைப்பட்டது. இந்த இரண்டு நாட்கள் மட்டும் அவர்கள் காத்திருந்தால் நான் மீண்டும் சீரியலில் நடிக்க வந்திருப்பேன். ஆனால், அவர்கள் எனக்கு பதில் வேறு நடிகர்களை மாற்றிவிட்டார்கள். அந்த இரண்டு தொடர்களையும் நான் மிகவும் மிஸ் செய்கிறேன். நிச்சயமாக புது புராஜெக்டில் மீண்டும் உங்களை வந்து சந்திக்கிறேன்' என உருக்கமாக பேசியுள்ளார்.