அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து |

கண்ணான கண்ணே சீரியல் ஓரளவுக்கு நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த மெகா தொடரில் ராகுல் ரவி, நிமேஷிகா ராதா கிருஷ்ணன், பப்லு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அப்பா மகளுக்கு இடையே நடக்கும் பாச போராட்டத்தையும், அப்பாவின் ஈகோ குணத்தால் ஏற்படும் பிரச்னைகளையும் மையக்கருவாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 250 எபிசோடுகளை தாண்டியுள்ள இந்த தொடர் புதிய திருப்பங்களுடன் விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை கீதா ரவிசங்கர் கண்ணான கண்ணே தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது கதாபாத்திரம் சமீபத்திய எபிசோடில் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கீதா ரவிசங்கர் முன்னதாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பல முறை குணச்சித்திர கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.