ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகளான ஐஸ்வர்யா தென்னிந்திய மொழிகளின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். திருமணத்துக்கு பின் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யாவுக்கு சூர்யாவின் ஆறு படத்தில் நடித்த சவுண்ட் சரோஜா கதாபாத்திரம் நீண்ட நாளுக்கு பிறகு கம்பேக்காக அமைந்தது. தொடர்ந்து தற்போதும் அவ்வப்போது தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது மகள் அனன்யாவுடன் சமீபத்தில் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ வைரலான போது மீடியாக்களின் பார்வை மீண்டும் ஐஸ்வர்யா பக்கம் திரும்பியது. இதனால் அவருக்கு தற்போது சீரியலில் நடிக்க சான்ஸ் கிடைத்துள்ளது.
ஐஸ்வர்யா தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'நினைத்தாலே இனிக்கும்' என்ற புதிய சீரியலில் இணைந்துள்ளார். ஐஸ்வர்யா, நினைத்தாலே இனிக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் மற்ற நடிகர்களோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அடுத்துவரும் எபிசோடுகளில் அவரது முக்கியத்துவம் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.