படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

விஜய் டிவியில் ஒளிபரப்பாக ஆரம்பித்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சீரியல்களில் ஒன்று ராஜபார்வை. இதில் நடிகர் முன்னா மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் புகழ் ராஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இதன் டைட்டிலும், ஹீரோவுக்கு கண் தெரியாத என்ற கான்செப்ட்டும் தான் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியது. ஆனால், சீரியல் ஆரம்பித்து சில நாட்களிலேயே அனைவருக்கும் போரடிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த அளவுக்கு சுவாரசியம் இல்லாத கதை ஓட்டம், திரைக்கதை காரணமாக பலருக்கு இந்த சீரியலை பிடிக்கவில்லை. இதன் சுவாரசியத்தை கூட்டுவதற்காக நடிகை ஆனந்தி இந்த சீரியலில் இணைந்தார். இருப்பினும் பெரிய அளவில் வரவேற்பு இல்லாத காரணத்தல் சீரியலை நிறுத்திவிட்டனர். 207 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பான ராஜபார்வை சீரியல் டிசம்பர் 18 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலும் ரக்ஷிதா விலகிய பின் சறுக்கலாக சென்று கொண்டிருக்கிறது. எனவே, அதையும் முடித்து வைக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை வைக்க ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையில் வைதேகி காத்திருந்தாள், ஈரமான ரோஜாவே 2 ஆகிய இரண்டு புதிய சீரியல்கள் விரைவில் வெளியாகிறது.