'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
சென்னை : தனது நேயர்களுக்குபொழுதுபோக்கின் மூலம் மகிழ்ச்சியை அள்ளி வழங்குவதே ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நோக்கமாகும். இந்த வாரயிறுதி விடுமுறையை சிறப்பானதாக மாற்ற நாளை (ஜனவரி 30), மதியம் 3.30மணிக்கு அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்ட கிரைம் திரைப்படம் - 'சித்திரை செவ்வானம்'உங்கள் ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது.
சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்ட் சில்வா இத்திரைப்படத்தில் இயக்குனராக முதல்முறையாக களமிறங்கியுள்ளார். நடிகை சாய் பல்லவியின் சகோதரி பூஜா கண்ணன் நாயகியாக அறிமுகமான சித்திரை செவ்வானத்தில் நடிகர் சமுத்திரக்கனி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தந்தை-மகளான முத்துப்பாண்டி (சமுத்திரக்கனி)மற்றும் ஐஷ்வர்யா (பூஜா கண்ணன்) கதாப்பாத்திரங்களை சுற்றியே கதை நகர்கிறது.
மருத்துவராக வேண்டும் என்கிற தனது மகளின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதே முத்துவின் ஒரே இலட்சியமாக உள்ளது. ஆனால் மகள் காணாமல் போக அவரது உலகமே தலைகீழாக மாறுகிறது. ஒரு விவசாயியான முத்துப்பாண்டி, தன் மகளின் நற்பெயரை கெடுக்க நினைத்த குற்றவாளிகளைஎதிர்த்து ஜெயித்து, காணாமல் போன தன் மகளையும் கண்டுபிடிக்கும் இத்திரைப்படம் நிச்சயம் ரசிக்க வைக்கும்.
உணர்வுபூர்வமான இந்த தந்தை மகளின் கதையைக் காண, வரும் ஜனவரி 30, மதியம் 3:30 மணிக்கு 'சித்திரை செவ்வானம்' திரைப்படத்தைஜீ தமிழ் தொலைக்காட்சியைக் காணத்தவறாதீர்கள்.