பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'கோகுலத்தில் சீதை' என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் ஆஷா கவுடா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் நடிகையானது எப்படி என்ற சுவாரசியமான கதையை தற்போது கூறியுள்ளார்.
ஆஷா கவுடாவுக்கு முதலில் நடிகையாக வேண்டும் என்ற ஆசை எதுவும் இல்லையாம். அவரது குடும்ப உறுப்பினர் பலரும் ஜிம்மில் டிரெய்னராக இருந்து வந்ததால் இவருக்கும் பிட்னஸ் டிரெய்னராக வேண்டும் என்ற ஆசை தான் இருந்ததாம். சிறிது காலம் ஒரு ஜிம்மில் ஏரோபிக்ஸ் பயிற்சியாளராகவும் வேலை பார்த்துள்ளார். இந்த காலக்கட்டத்தில் இவரது சமூகவலைதளம் பேஜை பார்த்த சீரியல் குழுவினர் கதைக்கு பொருத்தமான நாயகி என ஆஷா கவுடாவை ஆடிஷனுக்கு அழைத்துள்ளனர். அங்கே அவரது பெர்மான்ஸ் பிடித்து போகவே அஷா கவுடா வசுந்தராவாக மாறினார்.
பெங்களூரில் பிறந்து வளர்ந்த ஆஷா கவுடாவுக்கு தமிழ் தெரியாது. ஆனால், கோகுலத்தில் சீதை தொடரின் மூலம் தமிழ் மக்களின் மனதில் ஆஷா கவுடா இடம்பிடித்துள்ளார். தன் மேல் அன்பை காட்டும் தமிழ் மக்களின் பாசத்தை நினைத்து நெகிழும் அவர், 'நான் மிகவும் அதிர்ஷ்டசாலி' என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.