ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா | பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? | நயன்தாரா படத்தை தொடர்ந்து திலீப் படத்தை இயக்கும் வாரிசு நடிகர் | செல்வத்தைத் தருவாரா 'குபேரா' ? திரையுலகம் எதிர்பார்ப்பு… | ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'கோகுலத்தில் சீதை' என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் ஆஷா கவுடா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் நடிகையானது எப்படி என்ற சுவாரசியமான கதையை தற்போது கூறியுள்ளார்.
ஆஷா கவுடாவுக்கு முதலில் நடிகையாக வேண்டும் என்ற ஆசை எதுவும் இல்லையாம். அவரது குடும்ப உறுப்பினர் பலரும் ஜிம்மில் டிரெய்னராக இருந்து வந்ததால் இவருக்கும் பிட்னஸ் டிரெய்னராக வேண்டும் என்ற ஆசை தான் இருந்ததாம். சிறிது காலம் ஒரு ஜிம்மில் ஏரோபிக்ஸ் பயிற்சியாளராகவும் வேலை பார்த்துள்ளார். இந்த காலக்கட்டத்தில் இவரது சமூகவலைதளம் பேஜை பார்த்த சீரியல் குழுவினர் கதைக்கு பொருத்தமான நாயகி என ஆஷா கவுடாவை ஆடிஷனுக்கு அழைத்துள்ளனர். அங்கே அவரது பெர்மான்ஸ் பிடித்து போகவே அஷா கவுடா வசுந்தராவாக மாறினார்.
பெங்களூரில் பிறந்து வளர்ந்த ஆஷா கவுடாவுக்கு தமிழ் தெரியாது. ஆனால், கோகுலத்தில் சீதை தொடரின் மூலம் தமிழ் மக்களின் மனதில் ஆஷா கவுடா இடம்பிடித்துள்ளார். தன் மேல் அன்பை காட்டும் தமிழ் மக்களின் பாசத்தை நினைத்து நெகிழும் அவர், 'நான் மிகவும் அதிர்ஷ்டசாலி' என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.