பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

விஜய் டிவியின் சீரியல்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் கூட்டம் உண்டு. கமர்ஷியல் கண்டண்ட் இருந்தாலுமே கதை சொல்லும் விதம் குவாலிட்டியாக இருப்பதால், பேமிலி ஆடியன்ஸ் தாண்டி, பல இளைஞர்கள் விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்களாக உள்ளனர்.
இந்நிலையில் விஜய் டிவி புதிய சீரியலின் படப்பிடிப்பை சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. 'சிப்பிக்குள் முத்து' என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் யார் நடிக்கிறார்? கதைக்களம் என்ன என்பது குறித்த தகவல்களை விஜய் டிவி சீக்ரெட்டாக வைத்துள்ளது. அதிக எதிர்பார்ப்புடன் வெளியான 'வைதேகி காத்திருந்தாள்' தொடர் எதிர்பாரதவிதமாக முடித்து வைக்கப்பட்டது. எனவே, அந்த ஸ்லாட்டில் இந்த புதிய தொடர் ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மிக விரைவில் இந்த தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொலைக்காட்சி நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.