இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும் தொடர்களில் ஒன்று வள்ளி திருமணம். இதில் நக்ஷத்திரா, ஷ்யாம், நளினி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஆரம்பத்தில் பார்வையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்த தொடர், தற்போது சற்று சொதப்பி வருகிறது. எனவே, வழக்கம் போல் ஹிட் சீரியல் நடிகை ஒருவரை சிறப்பு வரவாக அழைத்து வந்து சுவாரசியத்தை கூட்ட முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் வள்ளி திருமணம் தொடரில் பிரபல சின்னத்திரை நடிகை ஸ்வேதா பண்டேகர் நுழைகிறார்.
நாயகன் கார்த்தியின் தோழியாக அறிமுகமாகியுள்ள ஸ்வேதா பண்டேகர், 'பூமிகா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வள்ளிக்கு வில்லியாக அவர் இனி இந்த சீரியலில் தொடர்ந்து முக்கியத்துவம் பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஸ்வேதா பண்டேகர் 'சந்திரலேகா' தொடரின் நாயகியாக நடித்து புகழின் உச்சத்தில் உள்ளார். 2014ம் ஆண்டு ஒளிபரப்பாக ஆரம்பித்த இந்த தொடர் 7 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருவதோடு இதுவரை 2100 எபிசோடுகளை கடந்துள்ளது. இந்த சீரியலின் ஆரம்பம் முதல் தற்போது வரை ஸ்வேதா தான் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.