ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
ஜீ தமிழில் ஒளிபரப்பான தொடர்களிலேயே அதிக வரவேற்பு பெற்று, அந்த சேனலுக்கு ஒரு பெரிய அடையாளத்தை கொடுத்தது என்றால் அது செம்பருத்தி தொடர் தான். இதில், கார்த்திக் ராஜ், ஷபானா, ப்ரியா ராமன், ஊர்வம்பு லெட்சுமி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பாக ஆரம்பித்த இந்த தொடர் கிட்டத்தட்ட 5 வருடங்களில் 1250 எபிசோடுகள் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்த தொடர் தற்போது நிறைவு பெற போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
செம்பருத்தி தொடர் நிறைவு பெற போவதாக வரும் தகவல் முதல் முறை இல்லை. 7 மாதங்களுக்கு முன்பே இந்த தொடர் முடித்து வைத்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. காரணம் கதையின் மெயின் லீடாக நடித்து வந்த கார்த்திக் ராஜ் தொடரை விட்டு விலகினார். எனவே, டிஆர்பி மிகப்பெரிய அளவில் அடி வாங்கியது. அதன்பிறகு அக்னி நடிக்க ஆரம்பித்தார். தற்போது தொடரை முடித்து வைக்க தயாரிப்பு மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் சேர்ந்து முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செம்பருத்தி தொடர் மிக விரைவில் முடிவுக்கு வரும் பட்சத்தில், ஜீ தமிழ் புதிதாக மூன்று சீரியல்களை ரிலீஸ் செய்ய உள்ளது. அதில், தவமாய் தவமிருந்து தொடர் செம்பருத்தியின் இடத்தை பிடிக்கும் என எதிபார்க்கப்படுகிறது.