ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு |

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான சரண்யா துராடி, நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். ஆரம்பத்தில் சில சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார். ஆனால், தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சின்னத்திரைக்கு வந்தார். விஜய் டிவியின் 'நெஞ்சம் மறப்பதில்லை', 'ஆயுத எழுத்து', 'வைதேகி காத்திருந்தாள்' ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். இவர் நடிக்க ஆரம்பித்த புதிய தொடரான வைதேகி காத்திருந்தாள் ஆரம்பித்த வேகத்திலேயே முடித்து வைக்கப்பட்டது. மேலும், அவர் நடித்த அனைத்து சீரியல்களுமே வெவ்வேறு காரணங்களுக்காக விரைவிலேயே முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், சரண்யா தற்போது தொகுப்பாளினி அவதாரம் எடுத்து புது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள ஆஹா கல்யாணம் என்ற நிகழ்ச்சியை வீஜே விஜய்யுடன் இணைந்து சரண்யா துராடி தொகுத்து வழங்கவுள்ளார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஜீ தமிழின் முக்கிய சீரியல்களில் ஒன்றான செம்பருத்தி தொடரில் முதலில் பார்வதியாக நடிக்க வேண்டியவர் சரண்யா தான். ஆனால், விஜய் டிவி சீரியல் வாய்ப்பு கிடைத்தால் செம்பருத்தி வாய்ப்பை விட்டுவிட்டார். தற்போது ஜீ தமிழுக்கு வந்திருக்கும் சரண்யா மிக விரைவில் புதிய சீரியலில் கமிட்டாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.