சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
தொலைக்காட்சி தொகுப்பாளினியான வீஜே தீபிகா, விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார். சரவண விக்ரம் - தீபிகா ஆகிய இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி சூப்பராக செட் ஆனதால், இந்த ஜோடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், தீபிகாவுக்கு முகப்பரு பிரச்னை இருந்ததால் அவர் பாதியிலேயே பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அதன்பிறகு சீரியல்களில் தீபிகாவிற்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையில் அவருக்கிருந்த முகப்பரு பிரச்னை சரியாகி விடவே குறும்படங்கள், போட்டோஷூட் என பிசியாக இருந்தார். இந்நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'சித்திரம் பேசுதடி' சீரியலில் வீஜே தீபிகா வில்லி கதாபாத்திரத்தில் கம்பேக் தரவுள்ளார். தீபிகாவின் என்ட்ரியால் கதையில் பல புதிய திருப்புமுனைகள் ஏற்பட உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நெகடிவ் ஷேடில் நடித்து பாராட்டுகளை பெற்றிருந்த தீபிகா தற்போது வில்லியாகவே என்ட்ரி கொடுப்பதால் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்த தொடரில் வீஜே தீபிகா நடிக்கும் காட்சிகள் வரும் புதன்கிழமை முதல் ஒளிபரப்பாகிறது. சித்திரம் பேசுதடி தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.