சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தொலைக்காட்சி தொகுப்பாளினியான வீஜே தீபிகா, விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார். சரவண விக்ரம் - தீபிகா ஆகிய இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி சூப்பராக செட் ஆனதால், இந்த ஜோடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், தீபிகாவுக்கு முகப்பரு பிரச்னை இருந்ததால் அவர் பாதியிலேயே பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அதன்பிறகு சீரியல்களில் தீபிகாவிற்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையில் அவருக்கிருந்த முகப்பரு பிரச்னை சரியாகி விடவே குறும்படங்கள், போட்டோஷூட் என பிசியாக இருந்தார். இந்நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'சித்திரம் பேசுதடி' சீரியலில் வீஜே தீபிகா வில்லி கதாபாத்திரத்தில் கம்பேக் தரவுள்ளார். தீபிகாவின் என்ட்ரியால் கதையில் பல புதிய திருப்புமுனைகள் ஏற்பட உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நெகடிவ் ஷேடில் நடித்து பாராட்டுகளை பெற்றிருந்த தீபிகா தற்போது வில்லியாகவே என்ட்ரி கொடுப்பதால் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்த தொடரில் வீஜே தீபிகா நடிக்கும் காட்சிகள் வரும் புதன்கிழமை முதல் ஒளிபரப்பாகிறது. சித்திரம் பேசுதடி தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.