தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நீண்ட நாட்களுக்கு பிறகு திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் தொடர் 'எதிர்நீச்சல்'. பெண்களின் ஆளுமையை பறைசாற்றும் வகையில் புதிய கதைக்களத்துடன் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. இதில், கனிகா, ப்ரியதர்ஷினி, ஹரிப்ரியா, மதுமிதா ஆகியோருடன் வெள்ளித்திரை நடிகரான மாரிமுத்துவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடருக்கான வசனத்தை முன்னாள் சீரியல் நடிகை ஸ்ரீவித்யா எழுதி வருகிறார். மக்கள் மத்தியில் அனைத்து வகையிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த தொடர் தற்போது 100-வது எபிசோடை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் எதிர்நீச்சல் தொடரின் இயக்குநர் திருச்செல்வம், வசனகர்த்தா ஸ்ரீ வித்யா ஆகியோருடன் நான்கு முன்னணி நடிகைகள் மற்றும் குழுவினர் இணைந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து கொண்டாடியுள்ளனர். தற்போது அதன் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.