பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் |
நீண்ட இடைவெளிக்கு பிறகு குஷ்பு நடித்த தொடர் மீரா. கடந்த மார்ச் 28 முதல் கலர்ஸ் தமிழ் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் கணவன் மனைவியின் கசப்பான மற்றும் இனிமையான உறவுகள் குறித்த அனுபவங்கள் கதையாக்கப்பட்டு ஒளிபரப்பானது. இதனை குஷ்பு தனது அவ்னி சினி மேக்கர்ஸ் மூலம் தயாரித்தார். குஷ்புவுடன் சுரேஷ் சந்திர மேனன், பூஜா லோகேஷ், அக்ஷயாக உள்பட பலர் நடித்தார்கள். கதையை குஷ்பு எழுத, ஏ.ஜவஹர் இயக்கினார். 62 எபிசோட்களே ஒளிபரப்பான நிலையில் இந்த தொடர் முடிவுக்கு வருவதாக குஷ்பு தகவல் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது குழுவினருடன் எடுத்துக் கொண்ட செல்பியை வெளியிட்டு குஷ்பு எழுதியிருப்பதாவது: எல்லா நல்ல விஷயங்களுக்கும் முடிவு வரும். வந்துவிட்டது. நாம் தொடர விரும்புகிறோம். ஆனால் அதை நீடிப்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்கிறேன். கலர்ஸ் தமிழ் சேனலுக்கு நன்றி. எனது குழுவுடன் மீண்டும் வருவேன். அதுவரை காத்திருங்கள். என்று குறிப்பிட்டிருக்கிறார்.